இரட்சிப்பை பெற்றுக்கொள்

“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:23)

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." (ரோமர் 5:8)


மேற் சொல்லிய வேதவார்த்தைகளின்படி நீங்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு கீழ் சொல்லிய ஜெபத்தை உங்கள் முழு மனதோடு செய்யுங்கள்.
இந்த நிமிடத்திற்கு முன்னாள் வரை, உங்களுடைய வாழ்க்கை எப்படி பட்டதாயிருந்தாலும், எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் சரி, இப்பொழுது நீங்கள் மனம் திரும்பி, இயேசு உங்கள் பாவங்களை எல்லாம் சிலுவையில் ஏற்றுக்கொண்டு, அவர் உங்கள் சார்பில் மரித்தார் என்று நம்பி, விசுவாசித்து, இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும், உங்கள் ஒரே தெய்வமாகவும் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, உங்கள் வாயினாலே அறிக்கை பண்ணும் போது, நீங்கள் பாவமன்னிப்பு பெற்று இரட்சிக்கப்படுவீர்கள்.
இரட்சிகப்படுவது என்றால் விடுதலை பெறுவது. பாவத்தில் இருந்து மட்டும் அல்லாமல்,சாபத்தில் இருந்தும், வியாதியில் இருந்தும், விடுதலை தருவதற்காகவே இயேசு இரத்தம் சிந்தினார், தம் உயிரைக் கொடுத்தார்.
ஜெபம்
தேவனே, நீர் உம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை எனக்காக இந்த உலகிற்கு அனுப்பினீர் என்றும், அவர் எனக்காக மரித்தார் என்றும், நீர் அவரை மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழுப்பினீர் என்றும் விசுவாசிக்கிறேன். இயேசுவை என் சொந்த தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளுகிறேன் மற்றும் அறிக்கையிடுகிறேன். இயேசுவே என் இருதயத்திற்குள் இப்பொழுது வாரும். நன்றி ஆண்டவரே! ஆமென்.
ஆமென். இப்பொழுது இயேசுவின் குடும்பத்திற்குள் நுழைந்துவீட்டிர்கள்! இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்! கர்த்தராகிய இயேசுவிற்கே மகிமை உண்டாவதாக! ஆமென்.
தொடர்ந்து அருகில் உள்ள கிறிஸ்தவ சபைக்கு செல்லுங்கள். ஒரு பைபிள்(வேதபுத்தகம்) வாங்கி தினமும் அதை வாசிக்கவும். இயேசு அதன் மூலம் உங்களோடு பேசுவார். ஜெபத்தில் நீங்கள் அவரோடு பேசலாம். கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஆன்லைனில் வேதபுத்தகம் வாசிக்கலாம்.
-
English Bible: https://www.biblegateway.com/
-
Tamil Bible: https://www.tamil-bible.com/
மேலும் கேள்விகள் இருந்தால் இந்த ஈமெயிலுக்கு அனுப்பலாம்.
info@gracepremalathaministries.org
Amen. Now you have entered the family of Jesus! In the name of Jesus, I greet you! Glory be to our Lord Jesus! Amen.